உத்திர பிரதேச தேர்தலில் திடீர் திருப்பம் – மாயாவதியின் அறிவிப்பால் கட்சியினர் அதிர்ச்சி!

லக்னோ (12 ஜன 2022): உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியினர் அறிவிப்பு லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் மிஸ்ரா இதை தெரிவித்தார். மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும், கூட்டணி எதுவும் இல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. முன்னதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...