தேச விரோதி – ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் காவல்துறையில் புகார்!

புதுடெல்லி (06 செப் 2022): பிரபல ஊடகவியலாளரும் Alt News இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, காவல்துறையில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது ஒரு கேட்சை கைவிட்டதால், கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் சமூக ஊடகங்களில் மோசமான ட்ரோலிங்கிற்கு உட்படுத்தப்பட்டார். சமூக…

மேலும்...

பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் விடுதலை – வீடியோ!

புதுடெல்லி (21 ஜூலை 2022): ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டர். மத உணர்வை புண்படுத்தியதாக ஜுபைரின் பழைய ட்வீட்டர் பதிவை வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களிலும் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை இரவு திகாரில் இருந்து ஜுபைர் விடுவிக்கப்பட்டார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

மேலும்...

ஊடகவியலாளர் ஜுபைர் ஜாமீன் மனு நீதிமன்றம் நிராகரிப்பு!

புதுடெல்லி (02 ஜூலை 2022):ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரின் ஜாமீன் மனுவை டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நிராகரித்தது, மேலும் ஜுபைருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது ஜுபைர் கடந்த 2018 இல், இந்து தெய்வத்திற்கு எதிராக பதிவிட்டதாக்க கூறி டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜுபைர் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜுபைரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. மேலும் டெல்லி காவல்துறையின் மனுவை…

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதுக்கு ஐ.நா செய்தித் தொடர்பாளர் கண்டனம்!

வாஷிங்டன் (29 ஜூன் 2022): இந்தியாவில் Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு கைது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐநா செய்தித் தொடர்பாளர், ஊடகவியலாளர்கள் எழுதுவதற்கும், ட்வீட் செய்வதற்கும், பேசுவதற்கும் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான Alt News இணை நிறுவனர் ஜுபைர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ட்வீட் ஒன்றின் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி காவல்துறையால் திங்கள்கிழமை (27-06-2022)…

மேலும்...

முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

புது டெல்லி (28 ஜூன் 2022): பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர், மத உணர்வை புண்படுத்தியதால் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினாலும் உண்மை வேறு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான AltNews இன் இணை நிறுவனர் முஹம்மது ஜுபைர் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். சமீபத்தில் முஹம்மது நபி குறித்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா-வின் உரையை உலகறியச் செய்தவர் முஹம்மது ஜுபைர். பாஜக-வின் சர்ச்சை தொடர்பாக அரபுலகம்…

மேலும்...

பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

புதுடெல்லி (28 ஜூன் 2022): உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முஹம்மது நபி குறித்து பரப்பிய அவதூரை உலகறிய செய்தவர் முஹம்மது ஜுபைர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவசர பதிந்த ஒரு ட்வீட் குறித்த புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது ஜுபைரை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு திங்கள்கிழமை…

மேலும்...