ராம நவமி ஊர்வலத்தில் மதரஸா மற்றும் மசூதிகளுக்கு தீவைப்பு!

புதுடெல்லி (02 ஏப் 2023): பீகார் மாநிலம் நாலந்தாவில் ராம நவமி ஊர்வலத்தின்போது மசூதிகள் மற்றும் மதரஸாக்களுக்கு தீ வைத்த வழக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம நவமி கொண்டாட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையை தொடர்ந்து, பீகாரில் பல்வேறு இடங்களில் இணையதளம் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க…

மேலும்...

தஞ்சை மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட ராணுவ வீரரை ராணுவத்திலிருந்து நீக்க கோரிக்கை!

தஞ்சாவூர் (16 ஜன 2023): தஞ்சாவூர் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியவர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் அன்சர் பள்ளிவாசலில் நேற்று அதிகாலையில் தற்சமயம் இராணுவத்தில் பணி புரியும் தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா (த/பெ ராஜேந்திரன்) என்பவர் தொழுகைக்கான அழைப்பு ஒலிவாங்கியில்…

மேலும்...

டிசம்பர் 6 அன்று மதுரா மசூதியில் ஹனுமான் வேதம் ஓத திட்டம் – 16 பேர் மீது வழக்குபதிவு!

மதுரா (02 டிச 2022): டிசம்பர் 6 அன்று மதுரா ஷாஹி ஈத்கா மசூதிக்குள் ஹனுமான் வேதம் ஓத இந்து அமைப்பினர் விடுத்த அழைப்பை அடுத்து, மதுரா நகர மாஜிஸ்திரேட் அந்த அமைப்பில் தொடர்புடைய 16 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட்களை பிறப்பித்துள்ளார். கடந்த மாதம், அகில் பாரதிய இந்து மகாசபா (ABHM) அதன் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிருஷ்ணரின் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமிக்கு அருகில் உள்ள மசூதிக்கு டிசம்பர்…

மேலும்...

மதுராவில் மற்றொரு மசூதியை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் மனு!

மதுரா (15 செப் 2022): உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மொகலாயர் கால மீனா மசூதியை அகற்றக் கோரி மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அகில பாரத இந்து மகாசபாவின் (ABHM) தேசிய பொருளாளர் தினேஷ் ஷர்மா, மதுரா சிவில் நீதிபதி (மூத்த பிரிவு) மதுரா, ஜோதி சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தாக்கூர் கேசவ் தேவ் ஜி கோவிலின் ஒரு பகுதியில்…

மேலும்...

மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கோரிக்கை!

பாட்னா (03 செப் 2022): பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை உத்தரபிரதேசத்தில் உள்ளதைப் போன்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பகுதியில் ஆய்வு நடத்த நிதிஷ் குமார் அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த பிராந்தியங்களில் யார் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை நடத்துகிறார்கள், யார் தங்குகிறார்கள்…

மேலும்...

மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் தேசிய கொடியை ஏற்ற பாஜக திட்டம்!

புதுடெல்லி (02 ஆக 2022): : ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மசூதி உள்ளிட்ட மத ஸ்தலங்களில் தேசியக் கொடியை ஏற்ற பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சிறுபான்மை பிரிவு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற 7,000 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக் கொடியை பாஜக திட்டமிட்டுள்ளதாக, பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆசாதி கா அம்ரித் மஹோஸ்தவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாடு…

மேலும்...

ஒலிபெருக்கிகள் தடை உத்தரவை கோவில்களும் பின்பற்ற வேண்டும் – பெங்களூரு தலைமை இமாம்!

பெங்களூரு (08 ஏப் 2022): கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்களின் ஒலிபெருக்கி சர்ச்சையில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு ஜாமியா மசூதியின் தலைமை இமாம் முகமது இம்ரான் ரஷாதி வியாழக்கிழமை, ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில்களும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். . இதுகுறித்து ரஷாதி கூறுகையில், “பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஒலியைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை மசூதிகளில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் பிறப்பித்த…

மேலும்...

50 வருடங்களாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பத்தினர்!

கொல்கத்தா (20 பிப் 2022): மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அங்குள்ள பராசத்தில் உள்ள அமனாதி மசூதியின் பராமரிப்பாளர்களாக கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இந்து குடும்பம் செயல்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாவின் பராசத்தை சேர்ந்த மூத்த குடிமகன் தீபக் குமார் போஸ் மற்றும் அவரது மகன் பார்த்த சாரதி போஸ் ஆகியோர் தற்போதைய சூழலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த நாபோபள்ளி பகுதியில்…

மேலும்...

மசூதி மினாரா இடிப்பு – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மதுரா (24 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஒரு மசூதியின் மினாரா, மர்ம நபர்களால் இடிக்கப் பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மதுரா மாவட்டத்தின் சாட்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதி மினாராவை புதன்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் இடித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலை அடுத்து கிராமத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக (மதுரா கிராமப்புற) போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஷ் சந்திரா கூறினார். “இச்சம்பவத்தை…

மேலும்...

முஸ்லிம்களுக்கு மசூதி எழுப்பும் இந்துக்களும், சீக்கியர்களும் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

மோகா (16 ஜூன் 2021): பஞ்சாபில் இந்துக்களும், சீக்கியர்களும் இணைந்து முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட அடிக்கல் நாட்டினர். பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றிணைந்து அங்கு வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்காக மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். ஞாயிற்றுக்கிழமை காலை இதற்காக நடந்த நிகழ்ச்சியில் அணைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முஸ்லிம்கள் நினைத்தனர். ஆனால் இந்துக்களும்,சீக்கியர்களும் குருத்வாராவின் வாயில்களைத் திறந்து…

மேலும்...