பாஜக தலைவர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு ஆயுள் தண்டனை!

கொல்லம் (11 பிப் 2020): பாஜக தலைவர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 9 பேருக்கு கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கேரள மாநிலம் கொல்லம் அருகே கடவூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க தலைவர் கடவூர் ஜெயன் என்பவர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒன்பது பேர் மீது, அஞ்சாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சிறையிலிருந்து…

மேலும்...

டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் அடித்துக் கொலை!

ஜெய்ப்பூர் (08 பிப் 2020): ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் பாஸித் கான் (20) அவருடன் பணிபுரிபவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பணிக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவருடன் பணிபுரியும் 6 பேர் கொண்ட கும்பல் பாஸித் கானை கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த பாஸித்கான் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடன் சென்ற நண்பர்களால் அனுமதிக்கப் பட்டார். எனினும் மருத்துவர்கள் பாஸித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலைக்கான காரணம்…

மேலும்...

கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை!

வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர். பிப்ரவரி 7 ந்தேதி இரவு…

மேலும்...

இந்து தலைவர் படுகொலையில் திடீர் திருப்பம்!

லக்னோ (07 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜிதேந்திரா என்ற ரஞ்சித் பச்சனின் மனைவியின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்….

மேலும்...

இந்து தலைவர் கொலைக்கு காரணம் மனைவியின் கள்ளத் தொடர்பு -பரபரப்பு தகவல்!

லக்னோ (06 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம்…

மேலும்...

விழுப்புரத்தில் பயங்கரம் – பெட்ரோல் பங்க் மேலாளர் குண்டு வீசி கொலை!

விழுப்புரம் (04 பிப் 2020): விழுப்புரத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கம்பன் நகரில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55) மேலாளராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமையும் பணியில் இருந்தார். பகல் 11 மணியளவில் காரில் வந்த 4 மர்ம நபர்களும், பைக்கில் வந்த 2 மர்ம நபர்களும் பெட்ரோல் பங்கில் டீசல் பிடிப்பது போல் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பெட்ரோல்…

மேலும்...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் பயங்கரம்!

ஈரோடு (03 பிப் 2020): ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அண்மையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பிரமுகர், சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையத்தில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில், தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக கொடுத்துவிட்டு இன்று காலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் அங்கு வந்த கூலிப்படையினர் 4 பேர், திடீரென…

மேலும்...

சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சென்னை (03 பிப் 2020): சென்னை அயனாவரம் சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப் பட்டது. சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தவர், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. அவரை, அதே குடியிருப்பில் வேலை செய்த காவலாளி பழனி, 40; பிளம்பர் ஜெய்கணேஷ், 23; லிப்ட் ஆப்பரேட்டர்கள் தீனதயாளன், 50; பாபு, 36, உட்பட, 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த, 2018 ஜனவரி முதல், ஜூன் வரை,…

மேலும்...

எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

ராமநாதபுரம் (01 பிப் 2020): எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். களியக்காவிளை செக்போஸ்ட்டில் ஸ்பெஷல் எஸ்ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்துல் ஷமிம், தவ்பீக் ஆகியோர் முதலில் கைதானவர்கள்.. உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் இவர்கள் கைதானார்கள். இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.. இந்த விவகாரத்தில் தமிழக கியூ பிரிவு போலீசார் சிறப்பான விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...