மோடி – அமித் ஷா இடையே கருத்து வேறுபாடு – பகீர் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். ராய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஏஏ, என்பிஆர், என்சிஆர் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று சொல்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, என்சிஆர் நாட்டில் நடைமுறைபடுத்தப்படாது என்கிறார். இங்கு யார் உண்மையைச் சொல்கிறார். யார் பொய் சொல்கிறார்….

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் பெண்களின் சரித்திரப் போராட்டம் -வீடியோ!

புதுடெல்லி (19 ஜன 2020): தேசிய கொடியுடனும் தேசிய கீதத்துடனும் டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு ,…

மேலும்...

பல லட்சம் மக்கள் பங்கேற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!

மங்களூரு (17 ஜன 2020): மங்களூரில் பல லட்சம் மக்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள அடயார் கன்னூர் மைதானத்தில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின் பாக்க்கில்…

மேலும்...

குடியுரிமை சட்டம் (CAA) NRC – NPR: ஒரு பார்வை!

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (என்பிஆா்) கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆா்சி) கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாா். எனினும், தற்போதைக்கு நாடு முழுவதும் என்ஆா்சி அமல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆா். என்ஆா்சி ஆகியவை…

மேலும்...

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் இருக்க வாய்ப்பு!

புதுடெல்லி (17 ஜன 2020): மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன. தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி…

மேலும்...

அமெரிக்க சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் (VIDEO)

சியாட்டில் (17 ஜன 2020): அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தெற்காசிய நாடுகளின் மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியற்றிற்கு எதிராக சியாட்டில் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குறித்து விளக்கம் அளித்து பேசிய நகரசபை உறுப்பினர் கேஷ்மா சவந்த் (Kshama Sawant) குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை வலதுசாரி சிந்தனை உள்ள…

மேலும்...

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை புறக்கணிப்போம் – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (15 ஜன 2019): அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த…

மேலும்...

தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக…

மேலும்...

சிறையில் ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன் – பெண் சமூக ஆர்வலர் சதாஃப் ஜாஃபர்!

லக்னோ (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ளார் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர். அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். குறிப்பாக, ” நான் பாகிஸ்தானி என்று அழைக்கப் பட்டு ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். சூ கால்கலால் உதைக்கப் பட்டேன். என்னைப் போன்று பல அப்பாவிகளுக்கு இந்த கொடுமைதான் நடக்கிறது. இத்தனைக்கும் அது மகளிர் காவல் நிலையம். அங்கு ஆண் காவலர்களின் ஆதிக்கம்…

மேலும்...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ….

மேலும்...