மோசமான வானிலை – அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (10 டிச 2022): மோசமான வானிலை காரணமாக வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அபுதாபியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு, பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்...

ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான…

மேலும்...

தீபாவளி பட்டாசு – காவல்துறை எச்சரிக்கை!

சென்னை (20 அக் 2022): தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை கொளுத்தவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும்…

மேலும்...

டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல்!

புதுடெல்லி (19 ஏப் 2022): விஎச்பி, பஜ்ரங்தள் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல் விடுத்துள்ளது. ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை அனுமதியின்றி நடத்தியதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விஎச்பி தலைவர் பிரேம் சர்மாவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதனை காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) உஷா ரங்னானி பிடிஐயிடம் தெரிவித்தார். “விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் செயற்பாட்டாளர்கள் மீது எப்ஐஆர்…

மேலும்...

இஃப்தார் நோன்பு துறக்கும் நேரத்தில் காவல்துறை முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!

கார்கோன் (15 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிப்பாக காவல்துறையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையின் மிருகத்தனத்தை பிரதிபலிக்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரின் சில பகுதிகள் 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கையாளர் அர்பாப் அலி பகிர்ந்துள்ள வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை நகரில் வெடித்த கலவரத்தின் போது , நோன்பு திறக்கும் வேளையில் பால் வாங்க வெளியே வந்த ஒரு…

மேலும்...

ராமநவமி கலவரம் – 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறை கொடூர தாக்குதல் – வீடியோ!

கார்கோன் (12 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தால் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான கார்கோனில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட பிறகும், காவல்துறை அதிகாரிகள் ஏப்ரல் 11 அதிகாலை பிலால் மசூதியின் கதவுகளை உடைத்து நுழைந்து அங்கிருந்தவர்களிடம் பயத்தின் சூழலை உருவாக்கியுள்ளனர். மசூதியின் எதிரில் இருந்த வீட்டிற்குள்…

மேலும்...

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்? – காவல்துறை பரபரப்பு விளக்கம்!

சென்னை (10 பிப் 2022): சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது…

மேலும்...

கீழக்கரையில் ஆள் மாற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு!

இராமநாதபுரம் (21 டிச 2021): இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக காவல்துறை ஆள் மாற்றி விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும் சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய…

மேலும்...

திருச்சி போலீசை கொலை செய்தது என்? – கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்!

திருச்சி (23 நவ 2021): சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொன்றது  குறித்து கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும்…

மேலும்...

நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – வீட்டிலே இருப்பதே துரை சிங்கம்தான் – நெட்டிசன்கள் கருத்து!

சென்னை (17 நவ 2021): நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. படத்தில் இடம்பெற்ற காலண்டர் மாற்றப்பட்ட பிறகும் எதிர்ப்பு தொடர்கிறது. இதனிடையே, ஜெய்பீம் படம் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிப்பதாக்…

மேலும்...