காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

புதுடெல்லி (29 ஜூலை 2021): தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிராசில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி…

மேலும்...
Rahul and Modi

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (28 ஜூலை 2021): பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான அவசர கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ‘பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. நாங்கள் சபையில் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது….

மேலும்...

பயமிருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் – காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் காந்தி ஆவேசம்!

புதுடெல்லி (17 ஜூலை 2021): காங்கிரஸ் கட்சியில் இருக்க பயமாக இருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி. அப்போது வழக்கத்தை விட ஆவேசம் அதிகமாகத் தென்பட்டது. மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய…

மேலும்...

வெற்று பேச்சு அவசியமில்லை தீர்வென்ன? – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (22 ஏப் 2021): கொரோனா தொற்று காரணமாக, தனது வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் கையாலாகாத தனத்தை சாடி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் , ” நான் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளேன். நாடு முழுவதும் இருந்து வரும் அதிர்ச்சிகரமான செய்திகளை பார்த்து வருகிறேன். கொரோனா வைரசால் மட்டுமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்று பேச்சுகளும், பயனில்லாத விழாக்களும்…

மேலும்...

ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

புதுடெல்லி (20 ஏப் 2021): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

கொரோனா தடுப்பூசியில் விளையாடும் மத்திய அரசு – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (09 ஏப் 2021): நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கருத்தில் கொண்டும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி கிடைக்க வகை செய்யும் வகையிலும் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. ஒருபுறம் கோவிட் வழக்குகள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதை விட்டு உடனடியாக கோவிட் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துவதோடு, அனைத்து மாநிலங்களுக்கும்…

மேலும்...

பாதுகாப்பு படை வீரர்கள் பலி – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புதுடெல்லி (05 ஏப் 2021): சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் உயிர்தியாகம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மோசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. திறமையற்ற செயல்பாட்டால்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உளவுத்துறையின் தோல்வி…

மேலும்...

ராகுல் காந்தி, ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை?

சேலம் (29 மார்ச் 2021): நேற்று ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது. சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தற்போது கொரோனா…

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...
Sonia Rahul

இந்திரா காந்தியின் முடிவு தவறானது – ராகுல் காந்தி பகீர் கருத்து!

புதுடெல்லி (03 மார்ச் 2021): “2014 ல் இருந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் போராடுவது அதிகாரத்திற்காக அல்ல நாட்டை பாதுகாப்பதற்காக” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ,”இப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. 2014 க்குப் பிறகு, காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன அவை அதிகாரத்திற்காக அல்ல, நாட்டிற்காகவும் நாடு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் போராடுகின்றன.” என்றார் 1975 ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரகால நிலையை…

மேலும்...