மன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் !

புதுடெல்லி (26 செப் 2020):முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் 88வது பிறந்த தினம் இன்று. அவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ராகுல் காந்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். அதில் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா தற்போது உணர்கிறது. அவருடைய நேர்மை, கண்ணியம் மற்றும் நாட்டுக்கான அர்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்துள்ளது. அவருக்கு…

மேலும்...

மோடியை புகழும் சீனா – சந்தேகம் கிளப்பும் ராகுல் காந்தி!

புதுடெல்லி (22 ஜூன் 2020): இந்திய வீரர்களை கொலை செய்துவிட்டு, இந்திய இடத்தையும் கைபற்றிக் கொண்டு, இந்திய பிரதமரை சீனா பாராட்டியுள்ளது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் தயார் படுத்தப்பட்டுள்ள்ன. இந்நிலையில், இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் கூறியதற்கு சீன பத்திரிகை பாராட்டு தெரிவித்து இருந்தது. அதை மேற்கோள் காட்டியுள்ள…

மேலும்...

நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி – ராகுல் காந்தி தாக்கு!

புதுடெல்லி (21 ஜூன் 2020): “பிரதமர் நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல்…

மேலும்...

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர் – பிரதமருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

புதுடெல்லி (20 ஜூன் 2020): சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், “20 இந்திய வீரர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா-சீனா இடையே கிழக்‍கு லடாக்‍கின் கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, மத்திய பா.ஜ.க. அரசு மீது திரு. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீனா திட்டமிட்டே தாக்‍குதல்…

மேலும்...

இந்திய சீன எல்லையில் வீரர்கள் சாவு – பிரதமர் மவுனம் ஏன்?: ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (17 ஜூன் 2020): லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா-சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த…

மேலும்...

இதுதான் குஜராத் மாடல் – கொரோனா உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான்: ராகுல் காந்தி!

புதுடெல்லி (16 ஜூன் 2020): நாட்டில் குஜராத் மாநிலத்திலேயே கொரோனா உயிரிழப்புகள் அதிகம் காணப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக குஜராத் மாடலை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைபற்றியது. ஆனால் பல விவகாரங்களில் குஜராத்தின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகம் குஜராத்தில்தான் என்று ராகுல் காந்தி புள்ளி விவரங்களுடன் விவரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில்…

மேலும்...

நம்பிக்கை அளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து – ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி (27 மே 2020): கொரோனா பரவல் மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி முக்கிய வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஹார்வோர்ட் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் அஷீஷ் ஷாவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனாவிற்கான தடுப்பு மருந்து குறித்து ராகுல் காந்தியிடம் பேசிய அஷீஷ் ஷா, கொரோனா தடுப்பில் மூன்று தடுப்பு மருந்துகள் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இவை சீனா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றில் தயாரிக்கும்…

மேலும்...

ஊரடங்கால் ஒரு பலனும் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி (26 மே 2020): கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை. கொரோனா பாதிப்பை…

மேலும்...

ராகுல் காந்தி மீது பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!

நாகர்கோவில் (20 மே 2020): ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்படுகிறார் என்று முன்னாள் மத்திய இணை அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து பேசிய அவர் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “வெள்ளாடிச்சிவிளை பகுதி தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். பள்ளிகள்…

மேலும்...

இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுரம் ராஜன் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (30 ஏப் 2020): ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள விளைவுகள், சந்திக்க வேண்டிய சவால்கள் உள்ளிட்டவை குறித்து திரு. ராகுல் காந்தி, ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், “ கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல்…

மேலும்...