கட்சி தொடங்கவில்லை – நடிகர் ரஜினி பரபரப்பு அறிக்கை!

சென்னை (29 டிச 2020): கட்சி தொடங்குவதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கினார். நடிகர் ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும்’ என்றும் கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள…

மேலும்...

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழருவி மணியன் பகீர் தகவல்!

சென்னை (28 டிச 2020): ரஜினியின் உடல் சரியில்லாத நிலையில் தமிழருவி மணியனின் பேட்டி, ரஜினியின் நல விரும்பிகளை பதற வைத்துள்ளது. ரஜினி ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மருத்துவமனை அறிவுறுத்தலின் படி, ரஜினிகாந்த் ஒரு வார காலத்துக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்; கொரோனா தாக்கக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் ஏற்கனவே ரஜினிகாந்த் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பது…

மேலும்...

ரஜினிக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை – கட்சி தொடங்குவதில் சிக்கல்!

ஐதராபாத் (27 டிச 2020): மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் ஆன ரஜினி பாதுகாப்புடனும் அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் ஓய்வுடன் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வாரம் முழுஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்று மாலையே தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்…

மேலும்...

ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து அப்பல்லோ குழப்பமான தகவல்!

ஐதராபாத் (27 டிச 2020): ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆவார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ள நிலையில் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மதியம்தான் எடுக்கப்படும் என அப்பல்லோ நிர்வாகம் கூறியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சி சிகிச்சைக்காக…

மேலும்...

ரஜினி டிஸ்சார்ஜ் – கட்சி நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பில்லை!

சென்னை (27 டிச 2020): நடிகர் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தகவலை ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் உறுதி செய்தார் நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3…

மேலும்...

ரஜினியின் ரத்த அழுத்தம் குறையவில்லை – டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம்!

ஐதராபாத் (26 டிச 2020): ரஜினியின் ரத்த அழுத்தம் குறையாததால் ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவெடுப்பதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாய் அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்….

மேலும்...

நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சனிக்கிழமை புதிய அறிக்கை!

ஐதராபாத் (26 டிச 2020): நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை சனிக்கிழமை அன்று புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாய் அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், நேற்று ரஜினிக்கு…

மேலும்...

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும்…

மேலும்...

கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக…

மேலும்...

கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை – ரஜினியின் தலைசுற்றல் நடவடிக்கை!

சென்னை (21 டிச 2020): மாற்று கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாக கூறி இன்னும் தொடங்காத ரஜினி கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல இழுபறிகளுக்கு இடையே சற்று குழப்பமான சூழ்நிலையில் ஜனவரி மாதம் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அது குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரஜினி கட்சியின் பல மாவட்டச் செயலாளர்கள் 22 பேர் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு…

மேலும்...