அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

லண்டன் (30 ஜன 2020): இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் 5 அமைப்புகள் சார்பில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் விடுத்த அறிவிப்பில், சிஏஏ என்பது அடிப்படையில் பாகுபாட்டுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் இந்தச் சட்டம் , சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே 2005…

மேலும்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது!

கொல்கத்தா (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நான்காவது மாநிலமாக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) திரும்பப் பெறவும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRC) முன்மொழியப்பட்ட பான்-இந்தியா செயல்படுத்தவும் இது அரசாங்கத்தை கோரியது. பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மேற்கு வங்க நாடாளுமன்ற…

மேலும்...

ஐரோப்பிய நாடுகளின் 154 சட்ட வல்லுநர்கள் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு கடும் கண்டனம்!

புதுடெல்லி (25 ஜன 2020): ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தலைச்சிறந்த 154 சட்ட வல்லுனர்கள் ஒன்றினைந்து இந்தியாவின் நீதிக்கு புறம்பான CAA – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களான இவர்கள், இந்த குடியுரிமை சட்டத் திருத்ததை “பாரபட்சமானது மற்றும் ஆபத்தான பிரிவினை ஏற்படுத்துவது” என்று எச்சரித்துள்ளார்கள். இன்னும் சில தினங்களில் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் முழுமையான ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில்…

மேலும்...

சிஏஏவுக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் தகவல்!

ஐதராபாத் (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க…

மேலும்...

கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது”…

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரத்தில் மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த சங்கராச்சார்யா பல்கலைக் கழகம்!

கொச்சி (21 ஜன 2020): கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கிடையே கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

அடுத்த மூன்று நாட்களில் அது நடக்கும் – மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா (21 ஜன 2020): “மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்!” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்ததோடு மத்திய…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ராஜஸ்தான் அரசு முடிவு!

ஜெய்ப்பூர் (20 ஜன 2020): கேரளா, பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசும்…

மேலும்...

கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிரடி முடிவு!

மும்பை (19 ஜன 2020): கேரளா பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிர அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் அரசும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. தற்போது மூன்றாவது மாநிலமாக…

மேலும்...