எம்.எல்.சி தேர்தலில் டாக்டர் கஃபீல்கான் போட்டி!

லக்னோ (16 மார்ச் 2022): வரவிருக்கும் உத்தரப்பிரதேச எம்எல்சி தேர்தலில் தியோரியா-குஷிநகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி டாக்டர் கஃபீல்கானை வேட்பாளராக நிறுத்துகிறது. இதனை சமாஜவாதி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த கஃபீல் கான், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை ட்வீட் செய்து இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!

லக்னோ (11 மார்ச் 2022): 2017 இல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2022 தேர்தலில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற சில முக்கிய முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா ஆசம் கான் ஆகியோர் அடங்குவர். 19% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 8.93% சிறுபான்மை சமூகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி…

மேலும்...

நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை – காங்கிரசுக்கு கடும் பின்னடைவு!

புதுடெல்லி (10 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 03 இடங்களிலும், காங்கிரஸ் 03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பஞ்சாப்…

மேலும்...
Mamta-Banerjee

உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார். அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

காலியாகும் பாஜக கூடாரம் – பாஜக அமைச்சரை தொடர்ந்து சமாஜ்வாதியில் இணையும் 13 எம்.எல்.ஏக்கள்!

லக்னோ (11 ஜன 2022): உ.பி. தொழிலாளர் துறை அமைச்சர், பா.ஜ.வில் இருந்து விலகியதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதிமூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். உத்தரபிரதேச தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, அமைச்சரவை மற்றும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்ததை அடுத்து இந்த தகவலை சரத் பவார் தெரிவித்துள்ளார். “உத்தரபிரதேசத்தில், நாங்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும்…

மேலும்...