என் பதவியை யாராலும் பறிக்க முடியாது – அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திட்டவட்டம்!

சென்னை (06 அக் 2020): அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பதவியை பறிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மதுசூதனன் மறுத்துள்ளார். சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் அதிமுகவில் சலசலப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், “அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு. மதுசூதனன்…

மேலும்...

சசிகலாவுக்கு எடப்பாடி ரகசிய தூது – ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்!

சென்னை (06 அக் 2020): சசிகலாவின் விசுவாசமிக்க தொண்டரான எடப்பாடி சசிகலாவின் தலைமையில் அதிமுகவை இயக்க தயாராகி வருவதாகவும், அதற்காக ரகசிய தூதும் விடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவிற்கு…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இல்லையாம் – அப்படின்னா யார்?

சென்னை (03 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க அதிமுக தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் சசிகலா தலைமையை அதிமுக ஏற்க தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது. சசிகலா தலைமையை அதிமுக மூத்த தலைவர்கள் ஏற்க தயாராகி விட்டதாகவும், வருகிற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பு அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடுத்து, அக்கட்சியின் நிரந்த பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா…

மேலும்...

சசிகலாவுக்கு புகழாரம் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் இபிஸ்!

சென்னை (28 செப் 2020): சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ,கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் பரபரப்பான இந்த செயற்குழுவில் முதலமைச்சராக்கியது யார்? என ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் எழுதியுள்ளது. தன்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என ஓ.பி.எஸ். பேசியதாகவும் இருவரையுமே முதலமைச்சராக்கியது…

மேலும்...

விடுதலைக்கு தயாராகும் சசிகலா!

சென்னை (21 செப் 2020):சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிடில்…

மேலும்...

அதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்!

சென்னை (20 செப் 2020): அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷமிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரியில் விடுதலையாவார் என செய்திகள்…

மேலும்...

தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

சென்னை (28 ஜன 2020): பொதுவெளியில் அமைச்சர்கள் கண்டபடி கருத்துக்களை முன் வைக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதே போல் , ரஜினி என்ன அப்படி பேசிவிட்டார் என்றும், சசிகலா சிறையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். அதேவேளை பல அமைச்சர்கள் ரஜினியின் பேச்சை கண்டித்திருந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்…

மேலும்...

சசிகலாவுக்கு அதிமுக அமைச்சர் திடீர் ஆதரவு – டென்ஷனில் எடப்பாடி!

ஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால்,…

மேலும்...

பணிந்தது தர்பார் திரைப்படக் குழு!

சென்னை (13 ஜன 2020): தர்பார் படத்தில் சசிகலா குறித்து இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் ஒரு காட்சியில், சிறை அதிகாரி ஒருவர் ரஜினியிடம் ”இப்ப எல்லாம் சிறைக் கைதிகள் ஜாலியா ஷாப்பிங் போயிட்டு வர்றாங்க சார்…” என்று கூறுவதாக வசனம் உள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வைத்தே இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது என்று…

மேலும்...