சவூதி அரேபியாவில் சமூக கூட்டங்களுக்கு தொடர்ந்து தடை!

ரியாத் (09 ஆக 2021): சவூதி அரேபியாவில் கோவிட் பரவலை தடுக்கும் ஒரு பகுதியாக சமூக கூட்டங்களுக்கான தடை தொடரும் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் பரவலை தடுக்க கடந்த வருடம் முதல் தொடரும் இந்த தடை இப்போது தொடரும் என்று சவூதி சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி திருமண மண்டபங்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள் போன்ற இடங்களில் கூடும் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது. கோவிட் பெருக்கத்திற்கு இத்தகைய கூட்டங்களே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும்,…

மேலும்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி!

ரியாத் (08 ஆக 2021): புதிய கல்வி ஆண்டில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவிட் 19 பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பள்ளிகளில் காலை கூட்டங்கள் மற்றும் விளையாட்டு…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இந்தியர் குத்திக் கொலை!

ஜித்தா (05 ஆக 2021): சவூதி அரேபியா ஜித்தாவில் 45 வயது இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பூரை சேர்ந்த குஞ்சலவி என்பவர் ஜித்தாவில் வாகனம் ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்து அவரை தேடியபோது அவர் வாகனத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இந்நிலையில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்….

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும். இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால…

மேலும்...

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசா – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (03 ஆக 2021): உலகின் 49 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருட மல்டிபிள் விசாவை அறிமுகப்படுத்துகிறது சவூதி அரேபியா. ஆகஸ்ட் 1 ஆம் தேதி நிலவரப்படி, சவுதி அரேபியா உலகம் முழுவதிலுமிருந்து 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி வருவதற்கு அனுமதி வழங்கியது. அதன்படி ஒரு வருட காலத்திற்கு பல நுழைவு மின்னணு (multiple-entry electronic visa )விசாவைப் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் தொடர்ந்து சவூதியில்…

மேலும்...

கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

ரியாத் (02 ஆக 2021): சவூதியில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை சவூதி சுகாதரத்துறை விதித்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம். அதற்குள் தடுப்பூசி பெறவில்லையெனில் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்…

மேலும்...

பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டு உம்ரா யத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (31 ஜுலை 2021): கோவிட் பரவல் காரணமாக பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து உம்ரா யாத்ரீகர்கள் வருவதற்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா விமான தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்…

மேலும்...

சவூதி அரேபியாவில் கொரோனா காரணமாக இந்தியாவின் 6 மாத கர்ப்பிணிப் பெண் மரணம்!

கத்தீப் (31 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவை சேர்ந்த 6 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி காதா(வயது-27) ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தாமாம் அருகிலுள்ள கத்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதாவின் உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை…

மேலும்...

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளால் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் கவலை!

ரியாத் (31 ஜூலை 2021): சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் சவூதி வாழ் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலை அடையச் செய்துள்ளது. கோவிட் பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட போதும் தேர்வுகள் நடக்கவில்லை. எனினும் தேர்வு முடிவுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதால், பலர் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை. தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள், உயர்கல்வி வாய்ப்பை சிதைப்பதாக மாணவர்களும்…

மேலும்...