சவூதியில் இனி டிஜிட்டல் இக்காமாவை பயன்படுத்தும் வசதி!

ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம். இகாமாவை புதுப்பிக்க மூன்று நாட்களுக்கு மேல் தாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பாஸ்போர்ட் துறை கூறியுள்ளது மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது அதிகாரிகளால் இகாமா கோரப்பட்டாலும், இந்த டிஜிட்டல் இகாமாவைக் காட்டினால் போதும். இகாமாவை புதுப்பித்த பிறகு, புதிய பிரிண்ட்…

மேலும்...

மழை பொழிவுக்குக் காரணமான மற்றுமொருவர்!

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப் பள்ளியின் தாளாளர் முதல்வர் உள்ளிட்டோரை அழைக்க ஒரு குழு அப்பள்ளிக்குச் சென்றிருந்தது. அச்சமயம் பள்ளி முதல்வர் தெரிவித்த செய்தி, நம் குழுவினரைக் கலங்கடித்துள்ளது. அதாவது மேல்நிலை (+2) படிக்கும் ஒரு மாணவனின் தந்தை அண்மையில் எதிர்பாரா விதமாக ரியாத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில்…

மேலும்...

உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல சவூதியில் இலவச விசா தொடக்கம்!

ஜித்தா (31 ஜன 2023): உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல நான்கு நாள் இலவச போக்குவரத்து விசாக்கள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ஃப்ளைனாசின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நான்கு நாள் பயண விசா இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வருபவர்கள் உம்ரா செய்யவும், மதீனாவுக்குச் செல்லவும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்லவும் அனுமதிக்கப்படுவர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். சவுதி விமான…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும் எனவும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜித்தாவில் பலத்த மழை பெய்தது. ரியாத் நகரிலும் இதே நிலைதான் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிழக்கு மாகாணம், ரியாத் உள்ளிட்ட…

மேலும்...

சவூதியில் வீட்டு வேலை செய்பவரின் இக்காமாவை மூன்று மாதத்திற்கு புதுப்பிக்க முடியுமா?

ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே இக்காமாவை புதுப்பிக்க முடியும். குடிவரவு சட்டத்தின் படி, வீட்டுப் பணியாளர்களின் இகாமாவை மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்க முடியாது. பணியாளர் விசாவில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இகாமாவை மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். வீட்டுப் பணியாளர் விசாக்கள் இந்த வகையின் கீழ் வராது. எனவே,…

மேலும்...

55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் உள்ள விமான நிறுவனங்களுக்கு இந்த சலுகை பயனுல்லதாக இருக்கும். சவுதி அரேபியாவின் சுற்றுலா மையங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் Fly Adeel சலுகைகளை வழங்குகிறது. இந்த டிக்கெட் விலையில் 7 கிலோ ஹேண்ட் பேக் அடங்கும். இருக்கைகள்…

மேலும்...

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது. பிரசவ காலத்தில் அந்த பெண் சிக்கல்களை தவிர்ப்பதற்காக ஐந்தாவது மாதத்திலேயே மருத்துவ கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயும் கருவில் உள்ள குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். தற்போது அந்த பெண்ணும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக ரியாத் இரண்டாவது ஹெல்த் கிளஸ்டர் தெரிவித்துள்ளது….

மேலும்...

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி அரேபியாவில், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சவூதி குடிமக்களைப் பணியமர்த்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நிதாகத் (Nitaqat) என்பது சிவப்பு, வெளிர் பச்சை, நடுத்தர பச்சை, அடர் பச்சை மற்றும் பிளாட்டினம் போன்ற வெவ்வேறு வண்ணங்களில் சவுதி மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப…

மேலும்...

சமூக ஊடகங்களில் கண்காணிப்பை கடுமையாக்கும் சவுதி அரேபியா!

ஜித்தா (23 ஜன 2023): “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்” என்று பொதுப் பாதுகாப்புத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-பஸ்ஸாமி தெரிவித்துள்ளார். 22வது ஹஜ் உம்ரா ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய முகமது அல்-பஸ்ஸாமி கூறுகையில், “சவூதி அரேபியாவில் குற்றவாளிகள் வாகனங்களில் பயணித்தால் அவர்களை பிடிக்கும் புதிய முறை விரைவில் அமல்படுத்தப்படும். குலுனா அமீன் இயங்குதள மேம்படுத்தல் நடந்து வருகிறது. குற்றவாளிகள் பற்றிய அனைத்து தகவல்களும் தகவல் தருபவர்களால் அந்த இயங்குதளத்தில் புதுப்பிக்கப்படும். மக்காவில்,…

மேலும்...