மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

மும்பை (25 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும்…

மேலும்...

இந்து முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் நிகழ்சிநிரல்: சிவசேனா தாக்கு!

மும்பை (12 ஏப் 2022): பாஜகவின் இந்துத்துவா, சுயநலம் மற்றும் வெற்று என்றும், பாஜகவின் இந்துத்துவவாதிகள்” நாட்டில் பிரிவினைக்கு முந்தைய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் பாஜகவிடம் இல்லை என்றும் சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மசூதிகளுக்கு வெளியே ‘ஹனுமான் பாடலை இசைப்பதன்…

மேலும்...

பாஜகவால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டன – உத்தவ் தாக்கரே!

மும்பை (24 ஜன 2022): பாஜகவுடனான கடந்த 25 ஆண்டுகால கூட்டணி வீணாகிவிட்டதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா முக்கிய பிரமுகர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மையே அழிக்க முற்பட்டு விட்டது. அதனாலேயே அக்கட்சியை விட்டு விலகினோம் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்துத்துவா வலிமைக்காக பாஜகவுடன் சிவசேனா இணைந்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியதில்லை. பாஜகவின் சந்தர்ப்பவாதம் இந்துத்துவாவை…

மேலும்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு ஆபத்து – என்ன சொல்கிறது சிவசேனா?

மும்பை (21 ஜூன் 2021): மஹாராஷ்ட்ராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனா கட்சி கூட்டணி கட்சியான பாஜகவுடன் நட்பை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் சமீபத்தில் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார், ஆனால் சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்,…

மேலும்...

பாஜகவுக்கு அடிமேல் அடி – முக்கிய தலைவர்கள் ராஜினாமா!

மும்பை (10 பிப் 2021): மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவின் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவுக்கு சிவசேனா சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கொங்கன் பிராந்தியத்தில் உள்ள வைபவ் வாடி மாநகராட்சியின் ஏழு கவுன்சிலர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு வந்து சென்ற சில மணி நேரங்களிலேயே அவர்கள் பாஜகவை…

மேலும்...

மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!

மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல்…

மேலும்...

பாஜக தலைவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்தரவதை செய்த சிவசேனாவினர்!

சோலாப்பூர் (08 பிப் 2021): மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சனம் செய்த பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் அவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்ரவதை செய்துள்ளனர். கடந்த காலங்களில் உத்தவ் தாக்கரேவை விமர்சிப்பவர்களை சிவசேனாவினர் தாக்கியுள்ளனர். முன்னாள் கடற்படை அதிகாரியான மதன் சர்மா, தாக்கரேவை கேலி செய்யும் கார்ட்டூனைப் பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டு சிவசேனாவினரால் தாக்கப்பட்டார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்த பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகரை முற்றுகையிட்ட சிவசேனாவினர்…

மேலும்...

அமலாக்கத் துறைஅலுவலகம் முன் பாஜக அலுவலகம் என பேனர் கட்டி அதிரடி காட்டிய சிவசேனா!

மும்பை (28 டிச 2020) : மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அலுவலகம் முன் சிவசேனா ‘பாஜக அலுவலகம்’ என்ற பேனரை தொங்கவிட்டு போராட்டம் நடத்தியது. பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டதை எதிர்த்து சிவசேனா நடத்திய போராட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த பேனரில் ‘பாஜக பிரதேச அலுவலகம்’ என்று எழுதப்பட்டிருந்தது. . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வர்ஷா…

மேலும்...

மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (07 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிவசேனா சாடியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிவு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்த நிலையில், 100 நாட்களை தாண்டி நெருக்கடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது….

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...