பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உ.பி.அரசு வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது. உ.பி சிறையிலிருந்து வெளிவந்த பின் சித்திக் கப்பன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “உத்திர பிரதேச அரசு என் மீது பொய்யான வழக்கு…

மேலும்...

தாயில்லா உலகை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது – சித்திக் காப்பன் மனைவி ரைஹானா உருக்கம்!

கோழிக்கோடு (05 அக் 2022) : தாயில்லாத உலகத்தில் வாழ்வதை சித்திக் கப்பனால் தாங்க முடியாது என சித்திக் கப்பனின் மனைவி ரைஹானா கூறியுள்ளார். உத்திர பிரதேசம் ஹத்ராஸ் தலித் பெண் படுகொலையைப் பற்றி தகவல் சேகரிக்கச் செல்லும்போது. செய்தியாளார் சித்திக் கப்பான் உத்திர பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்திக் கப்பன் தற்போது லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யுஏபிஏ வழக்கில் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும் சித்திக் கப்பன் டெல்லியில் 6 வாரங்கள்…

மேலும்...

சித்திக் கப்பனை விடுதலை செய்வதில் தாமதம்!

லக்னோ (13 செப் 2022): சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதான அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அவர் விடுதலை ஆவது தாமதமாகலாம் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2020 அக்டோபரில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் தலித் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்று கொண்டிருந்தபோது சித்திக் கப்பன் கைது செய்யப்பட்ட பின்னர் சிறையில்…

மேலும்...

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது எப்போது?

லக்னோ (09 செப் 2022): பத்திரிகையாளர் சித்திக் கப்பன் அடுத்த வாரம் லக்னோ சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார், “சித்திக் கப்பன் கடந்த சில மாதங்களாக லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் உத்தரவு இங்கு சமர்ப்பிக்கப்பட்டதும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார், ”என்று டிஜிபி (சிறை) அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) சந்தோஷ் குமார் வர்மா கூறினார். கடந்த 2020ஆம்…

மேலும்...

சித்திக் கப்பனுக்கு தீவிரவாத தொடர்பு – உ.பி அரசு!

புதுடெல்லி (06 செப் 2022): சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்குவதற்கு உத்திர பிரதேச அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மீதான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த உபி அரசு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கும் அமைப்புகளுடன் கப்பனுக்கு தொடர்பு இருப்பதாகவும், சித்திக் கப்பன் தீவிர பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பாட்டாளர் என்றும், செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கப்பனின் கணக்கில் வந்த ரூ.45,000க்கான ஆதாரம் தெளிவாக இல்லை…

மேலும்...

சித்திக் கப்பன் சிகிச்சையை உபியிலிருந்து டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (28 ஏப் 2021): பிரபல மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பனின் சிகிச்சையை உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உபி அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுறுகிறார். இந்நிலையில் சித்திக் கப்பனை சிகிச்சைக்காக எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்ற. சித்திக் கப்பனின் சிகிச்சை உ.பி.க்கு…

மேலும்...

அர்னாபுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சித்திக் காப்பானுக்கு இல்லை – கபில் சிபல் காரசார வாதம்!

புதுடெல்லி (11 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மீதான விசாரணையின்போது, மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பானின் விடுதலைதான் மிக முக்கியமானது, அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் முக்கியமல்ல என்று கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். ஹத்ராஸ் சம்பவத்தை கவரேஜ் செய்ய சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பனை உ.பி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது விடுதலை மீதான விசாரனை மனுவை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அர்னாபின் மீதான ஜாமீன் மனு உடனடி…

மேலும்...

சிறையிலிருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பானை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு!

புதுடெல்லி (24 அக் 2020): உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சந்திக்க மதுரா சிறை அதிகாரிகளும் நீதிமன்றமும் அனுமதிக்கவில்லை என்று சித்திக்கின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் கற்பழிப்பு குறித்து புகார் தகவல் சேகரிக்க உத்தரபிரதேசத்தில் இருந்த சித்திக் கப்பன், யுஏபிஏ மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்திக் கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் டெல்லி பிரிவு செயலாளர் ஆவார் இந்நிலையில் சித்திக் காப்பானை சந்திக்க மறுப்பது…

மேலும்...