குஜராத்தில் ராணுவப் படையினர் இடையே மோதல் – இருவர் சுட்டுக் கொலை!

போர்பந்தர் (27 நவ 2022): குஜராத் மாநிலம் போர்பந்தரில் ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேர்தல் பணிக்கு வந்த ராணுவ வீரர்கள், பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் மணிப்பூரை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இரு ராணுவ வீரர்கள் காந்திநகரில் உள்ள மருத்துவமனையில்…

மேலும்...

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்கள் 150 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

புதுடெல்லி (26 டிச 2020): குடியரசு தினம் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள 150 வீரர்களுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் எனபது உறுதியாகியுள்ளது. அணிவகுப்புக்கான பயிற்சிக்காக டெல்லி வந்த சில வீரர்களுக்கு , பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோவிட் பரிசோதிக்கப்பட்டபோது அவர்களுக்கு கோவிட் பதித்திருப்பது கண்டறியப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் ஆயிரம் வீரர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் கோவிட் உறுதிப்படுத்தியவர்கள் சிறப்பு கண்காணிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள்…

மேலும்...

ஆம்..!முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மையே! – அதிர வைக்கும் “இராணுவ வீரர்களின் வாக்குமூலம்!”

ஜெனீவா (10 செப் 2020): ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர வைத்த சம்பவம் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைகள். பல லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள்.அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த இனப்படுகொலை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. காம்பியா…

மேலும்...

காஷ்மீரில் நான்கு ராணுவ வீரர்கள் பலி!

ஸ்ரீநகர் (15 ஜன 2020): காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், அங்கு பல மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுகிறது. குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம், பனிச்சரிவில் சிக்கியது. இதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. ஒரு வீரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நவுகாம் செக்டார் பகுதியில்…

மேலும்...