Sonia Gandhi

மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது….

மேலும்...
Sonia Gandhi

ராஜினாமா செய்கிறாரா சோனியா காந்தி? – இன்று பரபரப்பு விவாதம்!

புதுடெல்லி (13 மார்ச் 2022): ஐந்து மாநில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணங்கள் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வரும்நிலையில், அவரால் தீவிரமான தேர்தல் பணிகளை செய்ய…

மேலும்...
Sonia Gandhi

காங்கிரசுக்கு புதிய தலைவர் – பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று ஆலோசனை!

புதுடில்லி (19 டிச 2020): : காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும், கட்சியின் மூத்த தலைவர்களுடன், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சி வரும் ஜனவரியில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், கட்சியின் தலைவராக ராகுலை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சோனியா விரும்புகிறார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களுடனும், அதிருப்தி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த, அவர் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக, டில்லியில், கட்சியின் தலைமை அலுலகத்தில்…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் யார்? – சோனியா காந்தி பின்வாங்கல்!

புதுடெல்லி (24 ஆக 2020): காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர விருப்பமில்லை என்று தற்போதைய தலைவர் சோனியா காநதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி…

மேலும்...

அடுத்து என்ன? – மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி!

புதுடெல்லி (06 மே 2020): மே 17 ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்யவுள்ளதாக திட்டம்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சி தலைவர் திருமதி.சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங், திரு.ராகுல் காந்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் பேசிய திருமதி சோனியா…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி ஐந்து முக்கிய பரிந்துரைகள்!

புதுடெல்லி (25 ஏப் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஐந்து முக்கிய பரிந்துரைகளை வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு திட்டமிடப்படாத ஒன்று என காங்., விமர்சனம்…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (24 ஏப் 2020): தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மூன்று வாரகால இடைக்கால தடை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், சாமியார்கள் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தியை அவதூறாக பேசியதாக, தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் திரு. அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கியதாக, திரு. அர்னாப் கோஸ்வாமியும் புகாரளித்தார். இந்நிலையில்,…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...

உங்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியுமா? – சோனியா காந்திக்கு பாஜக பதில்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு, சோனியா காந்தி மத்திய அரசை குறை கூறும் செயல், தரம் தாழ்ந்த அரசியல் என பாஜக தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம், திட்டமிட்ட சதி என திருமதி. சோனியா தெரிவித்துள்ளது, கண்டனத்துக்‍குரியது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார். சீக்கியர்களின் ரத்தக்கறை படிந்துள்ள காங்கிரஸ், டெல்லி கலவரத்தை வைத்து தரமற்ற அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். அமைதியை உறுதிபடுத்த வேண்டிய தருணத்தில், திருமதி. சோனியாவின் கருத்து, காவல்துறையின் மன…

மேலும்...

டெல்லி கலவரம் – தலைவர்களின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: சோனியா காந்தி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை எதுவும் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும்…

மேலும்...