நெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. இவர்களில் தினக்கூலிகள் கையில் உணவு,பணம் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வரங்கல் புறநகர் கிணற்றில் மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களின் உடம்பில்…

மேலும்...

பிரபல பின்னணி பாடகி திடீர் தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!

பெங்களூரு (18 பிப் 2020): பிரபல கன்னட திரைப்பட பின்னணி பாடகி சுஸ்மிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மிதா ராஜி.. இவருக்கு வயது 26. எம்பிஏ பட்டதரியான இவர் சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் உண்டு. இந்நிலையில் சுஷ்மிதாவுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளை பெயர் சரத்குமார்… சாப்ட்வேர் என்ஜினியர்… கூட்டுக்குடும்பத்தில் சுஷ்மிதா அடியெடுத்து வைக்க.. குடும்பம் சந்தோஷமாகவே…

மேலும்...

முன்னாள் முதல்வரின் மகன் மர்ம மரணம்!

லண்டன் (12 பிப் 2020): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வரின் மகன் லண்டனில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வராக இருந்தவர் காங்கிரசைச் சேர்ந்த கலிக்கோ புல். இவரது மகன் ஷுபான்சோ புல் (20) என்பவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சசெக்ஸில் பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் இறந்து கிடந்துள்ளார். தற்போது ஷுபான்சு உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பணிகள் நடைபெற்று…

மேலும்...

ஸ்மார்ட் போனால் ஏற்படும் மன உளைச்சல்களும் தற்கொலைகளும்!

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனின் வாழ்வில் இடம்பெறும் மின்னணு சாதனங்களும் அதிகரித்துவிட்டன. தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட மொபைல் போன் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து உபயோகிக்கும்போது உடல் ரீதியாகவும், மன…

மேலும்...

டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...

தாராபுரம் அருகே பெண் காவலர் தற்கொலை!

திருப்பூர் (02 பிப் 2020): திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் வள்ளியம்மாள் (31), இவரது கணவர் ராமசாமி (35). இந்த தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வள்ளியம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது…

மேலும்...

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை!

திருச்சி (30 ஜன 2020): திருச்சியில் மருத்துவர் ஒருவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தென்னூர் பகுதியில் மிகப் பிரபலமான மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருப்பவர் சரவணன். கடந்த 26 ஆம் தேதி சரவணன் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்தார். அப்போது மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறைக்குச் சென்று அவர் திடீரென தனது இடது கையில் மயக்க ஊசி அதிக அளவில் போட்டுக்கொண்டார்….

மேலும்...

அழகாய் இல்லாததால் கணவன் துன்புறுத்தல் – புது மணப்பெண் தற்கொலை

நாகர்கோவில் (29 ஜன 2020): அழகாக இல்லாததை காரணம் காட்டி கணவன் துன்புறுத்தியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகா்கோவில் காற்றாடித்தட்டையை சோ்ந்த அா்சனா (24) சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில்தான் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று…

மேலும்...

பிரபல நடிகை தற்கொலை!

மும்பை (25 ஜன 2020): பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சேஜல் ஷர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான ‘Dil Toh Happy Hai Ji’ மூலம் பிரபலமானவர் செஜல் ஷர்மா. இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்...

தமிழகம் இதில் இரண்டாவது இடம் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வேலையில்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர்,…

மேலும்...