நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை…

மேலும்...

சிஏஏ போராட்டக்காரர்களின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (18 ஜுன் 2021): சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப் இக்பால் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மூவரையும் உபா சட்டத்தில் கைது செய்த டெல்லி போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் ஜாமீன் மீதான விசாரணையின்போது டெல்லி உயர் நீதிமன்றம் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின்…

மேலும்...

சித்திக் கப்பன் சிகிச்சையை உபியிலிருந்து டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (28 ஏப் 2021): பிரபல மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பனின் சிகிச்சையை உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உபி அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுறுகிறார். இந்நிலையில் சித்திக் கப்பனை சிகிச்சைக்காக எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்ற. சித்திக் கப்பனின் சிகிச்சை உ.பி.க்கு…

மேலும்...
Supreme court of India

என்.வி.ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்!

புதுடெல்லி (06 ஏப் 2021): உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். அவர் இந்த மாதம் 24 ஆம் தேதி பதவியேற்பார். மே 23 அன்று ஓய்வு பெறும் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணாவை பரிந்துரைத்திருந்தார். என்.வி.ரமணன் ஆகஸ்ட் 27, 1957 அன்று ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பொன்னவரம் கிராமத்தில் பிறந்தார். ஏப்ரல் 27, 2000 அன்று ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக முதலில் நியமிக்கப்பட்டார். மே 10,…

மேலும்...

ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது குற்றமல்ல – மும்பை நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைப்பு!

புதுடெல்லி (27 ஜன 2020): ஆடைக்கு மேல் பெண்ணின் மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை டெல்லி உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 39 வயது   நபர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியை  மார்பகங்களை ஆடையோடு சேர்த்து அழுத்தி பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக குற்றவாளிக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு நடைபெற்றது. குற்றவாளியை…

மேலும்...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு – போராட்டத்தை தொடர முடிவு!

புதுடெல்லி (13 ஜன 2021): விவசாயிகளின் சட்டங்களை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த குழுவுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் முன்வந்துள்ளன. அவர்கள் குழுவுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று அமைப்புகளின் கருத்து. சட்டத்தை ஆதரிப்பவர்கள் குழுவில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் உள்ள உழவர் அமைப்புகள் தாங்கள் ஒரு குழு முன் ஆஜராக மாட்டோம்…

மேலும்...

நீங்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் செய்வோம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுடெல்லி (11 ஜன 2021): வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதுகுறித்த விசாரணையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே “பிரச்சினையின் இணக்கமான தீர்வை எங்களால்…

மேலும்...

ஈவிஎம் முறையில் தேர்தல் நடத்துவதற்கு தடை கோரும் மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

புதுடெல்லி (07 ஜன 2021): மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (ஈ.வி.எம்) பதிலாக தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஈவிஎம் மெஷினில் நடத்தப்படும் தேர்தல் முறைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முறைகேடுகள் மற்றும் அவநம்பிக்கை காரணமாக பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஈ.வி.எம் அரசியலமைப்பின் 324 வது பிரிவை மீறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும்…

மேலும்...
Tabligh Jamath

விடுதலையான தப்லீக் ஜமாத்தினருக்கு உதவ வேண்டும் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (22 டிச 2020): ஒன்பது மாத சட்ட போராட்டத்திற்குப் பிறகு அணைத்து தப்லீக் ஜாமத்தினரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப் பட்டதோடு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் பங்கேற்றதன் மூலம் கோவிட் -19 மேலும் பரவியதாக அப்பாவி தப்லீக் ஜமாத்தினர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும்…

மேலும்...
Supreme court of India

விவசாயிகள் போராட முழு உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகள் போராட்டம் நடத்த முழு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது. மேலும் மறு விசாரணையை ஜனவரி வரை ஒத்திவைத்துள்ளது. மேலும் விவசாய சட்டங்களின் சட்டப்பூர்வ செல்லுபடியாகும் தன்மை இப்போது ஆராயப்படாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. விவசாயிகளின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்த அதே நேரத்தில், விவசாயிகளுக்கு போராடும் உரிமை உண்டு, அதில் நீதிமன்றம் தலையிட…

மேலும்...