2 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மீண்டும் திறப்பு!

புதுடெல்லி (17 மார்ச் 2022): கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டு மூடப்பட்ட டெல்லி , நிஜாமுதீன் மார்க்கஸ் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. கோவிட்-19 நெறிமுறைகளை மர்கஸ் வருபவர்கள் பின்பற்றுவதை மசூதி நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறியதை அடுத்து , டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மார்க்கஸின் மூன்று தளங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவில், மசூதி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் மார்ச் 18 ஆம் தேதி ஷப்-இ-பாரத்திற்கு ஒரு நாள்…

மேலும்...

டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸை மீண்டும் திறக்க வக்ஃப் வாரியத்தின் மனுவைக் கையாளும் நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, உடனடியாக ஹஸ்ரத்…

மேலும்...
Tabligh Jamath

தப்லீக் ஜமாத்தினர் மீதான விஷமத்தனமான மருத்துவ குறிப்பு எம்பிபிஎஸ் பாட புத்தகத்திலிருந்து நீக்கம்!

புதுடெல்லி (16 மார்ச் 2021): தப்லீ ஜமாத்தை கொரோனா பரப்பியவர்கள் என அவதூறு குறிப்பை எழுதிய மருத்துவ ஆசிரியர்கள் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் அந்த குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாடப்புத்தகத்தில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து விஷமதனமான குறிப்பு பதியப்பட்டிருந்தது. இந்த குறிப்புகளை அகற்றிய ஆசிரியர்களும் புத்தக வெளியீட்டாளர்களும்,  இதுபோன்ற குறிப்புகளை வெளியிட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டனர். விஷமக்கருத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள்…

மேலும்...
Tabligh Jamath

விடுதலையான தப்லீக் ஜமாத்தினருக்கு உதவ வேண்டும் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (22 டிச 2020): ஒன்பது மாத சட்ட போராட்டத்திற்குப் பிறகு அணைத்து தப்லீக் ஜாமத்தினரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப் பட்டதோடு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு திரும்ப மத்திய அரசு உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் பங்கேற்றதன் மூலம் கோவிட் -19 மேலும் பரவியதாக அப்பாவி தப்லீக் ஜமாத்தினர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும்…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் மீது வீண்பழி – அரசு மற்றும் ஊடகங்கள் மீது மும்பை நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (23 ஆக 2020): கொரோனா பரவலுக்கு வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அரசு பலிகடா ஆக்கியுள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) நீதிபதி டி.வி.நலாவடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் கொண்ட அமர்வு டெல்லியில் மார்கஸ் தப்லீக்கில் கலந்து கொண்ட பல இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தனர். டெல்லியில் மார்கஸில் கலந்து கொண்ட தப்லீக் வெளிநாட்டினரை பலிகடாக்களாக தேர்வு…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா…

மேலும்...

வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு!

புதுடெல்லி (14 ஜூன் 2020): இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் விரைவில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தங்கியிருந்த வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது, விசா நடைமுறையை மீறியதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருவதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது தனிமைப்படுத்தல் காலங்களும் முடிவடைந்தன. இந்நிலையில் வெளிநாட்டு ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவைக்குமாறு…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரை உடனடியாக விடுதலை செய்க – அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அலகாபாத் (03 ஜூன் 2020): தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்களையும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த மற்றவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷாத் அன்வர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் குப்தா மற்றும் நீதிபதி சவுராப் ஷியாம் ஷம்ஷேரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திங்களன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், இந்திய அரசியலமைப்பின் 21 வது…

மேலும்...

முஸ்லிம்கள் மீது விஷக்கருத்தை பரப்பிய – மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானியின் உரிமைத்தை ரத்து செய்ய கோரிக்கை!

கான்பூர் (02 ஜூன் 2020): முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் கொரோனாவை பரப்பியவர்கள் அவர்கள்தான் என்றும் விஷக்கருத்தை பரப்பிய டாக்டர் ஆர்த்தி லால்சந்தானியின் மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள்…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM…

மேலும்...