கொரோனா வைரஸ் : பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ள தமிழக முஸ்லிம்கள்!

திருச்சி (26 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டு பலரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வைரஸின் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நோயிலிருந்து நிவாரணம் பெற்ற முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஜாதி மத பேதமின்றை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில் டெல்லி தப்லீக் ஆலோசனை கூட்டத்துக்கு சென்று திரும்பிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அரசின் உத்தரவை அடுத்து தானாகவே முன் வந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு…

மேலும்...

நான் தலைமறைவாக இருந்தேனா? – மனம் திறந்த தப்லீக் ஜமாத் தலைமை இமாம்!

புதுடெல்லி (22 ஏப் 2020): தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி மறுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடத்திய ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக அரசும் ஊடகங்களும் மாறி மாறி குற்றச்சட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது அந்த குற்றச் சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிறகு தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி முதன்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகள் – துபாய் இந்திய தூதுவர் எச்சரிக்கை!

துபாய் (21 ஏப் 2020): முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் பதிபவர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வளைகுடாவில் வசிக்கும் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள்…

மேலும்...

ரூ 10 கோடி நஷ்ட ஈடு – அவதூறு பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி நோட்டீஸ்!

புதுடெல்லி (19 ஏப் 2020): தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு மவ்லானா சஜ்ஜாத் நோமானி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அரசும் வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினர் அப்பாவிகள் – உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!

புதுடெல்லி (18 ஏப் 2020): தேசத்தின் ஒவ்வொரு முஸ்லிமும் தப்லீகியை பின்பற்றுபவர்கள் இல்லை; தப்லீகிகள் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை என்று புதுதில்லி சிறுபான்மை கமிஷன் தலைவரான டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் மற்றும் உறுப்பினர் கர்தார் சிங் கோச்சார் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு,ம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், கர்தார் சிங் கோச்சார் ஆகியோர் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும்…

மேலும்...

கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்ற தப்லீக் ஜமாத்தினர் சிறையிலடைப்பு!

சேலம் (17 ஏப் 2020): கொரோனா தொற்று பாதிக்கப் பட்ட ஐந்து பேர் உட்பட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த 16 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 13,430 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 448 பேர் உயிரிழந்துள்ளனர். 1768 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத்தினர் பலரும் கொரோனா தொற்று மற்றும் சந்தேகத்தின் பேரில் தமிழகம் முழுவதும்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்களின் அவதூறு – பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (16 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பி வரும் நிலையில், அந்த ஊடங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – ஊடகங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் இப்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. ஜனவரியின் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா நுழைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மார்ச் இறுதி வாரங்களிலேயே இந்திய அரசு இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் மார்ச் இரண்டாவது வாரங்களில் கூடிய டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டம் குறித்து மட்டுமே…

மேலும்...

கொரோனா சர்ச்சை: தப்லீக் ஜமாஅத் பட்டியலில் முஸ்லிம் அல்லாதவர்கள் – திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (13 ஏப் 2020): கொரோனா தகிடுதத்தங்களில் தப்லீக் ஜமாஅத் பட்டியலில் 108 முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா பரவ தொடங்கியதும், அரசின் மெத்தனப் போக்கை மறக்கடிக்க தப்லீக் ஜமாஅத்தினர் மீது பழி போடத்தொடங்கியது. டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்ற பொய்யான…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வீண் விவாதம் வேண்டாம் – மன்சூர் காஷிபி கோரிக்கை!

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிக்கப் பட்டவர்களாக கூறப்படும் தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் வீண் விவாதம் வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காஷிபி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாஅத்தினரின் எண்ணிக்கை குறித்து சிலர் சமூக வலைதளங்களில் சந்தேகம் கிளப்பியுள்ளனர். தமிழக அரசு தெளிவாகவே விளக்கம் அளித்து வருகிறது. இதில் சந்தேகிக்க எதுவும் இல்லை. தமிழகத்திலிருந்து டெல்லி சென்றவர்கள்…

மேலும்...