வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து!

திருவனந்தபுரம் (13 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தோல்விக்கு அசாதுத்தீன் உவைசியே காரணம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று பிரபல மலையாள எழுத்தாளரும், ஊடகவியலாளருமான என்.எஸ்.மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் முஸ்லிம்களின் தவிற்கமுடியாத தலைவராக உவைசி வளர்ந்து வருவதையே பீகாரில் அவரின் வாக்கு சதவீதம் காட்டுகிறது. தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி வழக்கமான வாக்குகளை பெற்றதாக தெரியவில்லை. அதனை பெற்றிருந்தாலே தேஜஸ்வி கூட்டணி ஆட்சி…

மேலும்...

மக்கள் எங்களுக்கு ஆதரவு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு :தேஜஸ்வி!

பாட்னா(12 நவ 2020): பிகாரில் தேர்தல் ஆணையத்தின் ஆதரவிலேயே பாஜக வெற்றி பெற்றதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் வாக்குகள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அஞ்சல் வாக்குகள் கணக்கிடப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்தது? மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கையை கூட தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று தேஜஸ்வி மேலும் கூறினார். குறைந்தது 20…

மேலும்...

பீகாரில் தேஜஸ்வி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சி!

பாட்னா (12 நவ 2020): பீகாரில் 125 இடங்களை வென்ற தேசிய ஜனநாயக கூட்டணி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்க சாத்தியம் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஜே.டி.யுவில் 17 அமைச்சர்களும், பாஜக 12 அமைச்சர்களும் இருந்தனர். இந்த நேரத்தில் பாஜக 74 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், வீடு மற்றும் கல்வி உள்ளிட்ட…

மேலும்...

பீகார்: வெற்றி பெற்றவர்களை தோற்றதாக அறிவித்ததாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பாட்னா (11 நவ 2020): பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி நேர பரபரப்பிற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,. மூன்று கட்டமாக பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ நிதிஷ் கூட்டணி முன்னிலை பெற்றாலும், இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…

மேலும்...

நாமதான் ஆட்சி அமைப்போம் – தேஜஸ்வி திட்டவட்டம்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆட்சியே அமையும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகாரில் 243 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜனதா கூட்டணி – மகா கூட்டணிக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டது. தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னணி பெற்றிருந்தது. தற்போது என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாக்கு மையம்…

மேலும்...

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய பீகார் தேர்தல் முடிவுகள்!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும்,…

மேலும்...

பீகாரில் ஆட்சியை பிடிக்கும் லாலுவின் மகன் – கருத்துக் கணிப்புகள் தகவல்!

பாட்னா (08 நவ 2020): பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் 243 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள், அங்கு லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறுகின்றன….

மேலும்...