இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு திடீர் நிறுத்தம்!

புதுடெல்லி (23 ஜூன் 2021): பயணத் தடை தொடர்பான தெளிவான அறிப்பு இல்லாததால், விமான நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாகப் பெறுவதுடன், பயணம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கோவிட் டெஸ்ட் நெகட்டிவ் ஆன சான்றிதழை வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் இன்று முதல் துபாய் செல்ல அனுமதி வழங்கப் பட்டிருந்தது. ஆனால் விமான சேவை இன்று தொடங்கப்படுமா என்பது குறித்து எந்த பெரிய…

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (21 ஜூன் 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலை அடுத்து அங்கிருந்து இந்தியர்களுக்கு பயணம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 23 ஆம்தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிற்கான பயணத்தடையை நீக்குகிறது. அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம் அங்கிகரித்துள்ள தடுப்பூசி இரண்டு டோஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயில்…

மேலும்...

நுரையீரல் புற்றுநோய் மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்!

துபாய் (20 ஜூன் 2021): நுரையீரல் புற்றுநோய்க்கான புதிய மருந்தை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்துள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு புதிதாக உருவாக்கப்பட்ட லுமக்ராஸ் என்ற மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு அமெரிக்காக. இரண்டாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம். இந்த வாய்வழியாக செலுத்தும் மருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உட்பட்ட வயதுவந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக, கோவிட்டுக்கு எதிரான உலகின் முதல் மருந்தான சோட்ரோவிமாப்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா பயணத் தடை மேலும் நீட்டிப்பு!

துபாய் (30 மே 2021): இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்காண பயண தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது . இது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட பயண முகவர் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்தது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் தனது…

மேலும்...

மொபைல் மூலம் வாங்கி மோசடி செய்த 5 பேர் கைது – அபுதாபி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அபுதாபி (18 பிப் 2021): தொலைபேசி மூலம் வாங்கி கணக்குகளில் பணம் கொள்ளையடித்த கும்பல் ஐந்து பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தொலைபேசிகள் மற்றும் பல சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிந்துள்ளது. இவர்கள் கணக்கு இலவசம் என்று கூறி அவர்கள் பலரை தொலைபேசி மூலம் அழைப்பார்கள். பின்பு வங்கி…

மேலும்...

துபாயில் சிக்கித் தவிக்கும் சவூதி வாழ் இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை!

துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட்!

துபாய் (17 ஜன 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் உட்பட பல பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மங்கலான கால சூழ்நிலையால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

மேலும்...

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்பு!

துபாய் (15 டிச 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த மோசடியினால் சம்பளம் இன்றித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்கப் பட்டுள்ளனர். இந்திய துணைத் தூதரகம் மற்றும் அஜ்மான் இந்திய சங்கம், மற்றும் காவல்துறையின் உதவியுடன், இவர்கள் மீட்கப் பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் அனைவரும் முகவர்கள் மூலம் ஏமாற்றப் பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டோரிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட பிறகு, அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் படுவார்கள்….

மேலும்...