போர்களத்துக்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எப்படி உக்ரைனில் இருந்து வாஷிங்டனுக்கு வந்தார்?

வாஷிங்டன் (23 டிச 2022): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிசம்பர் 21-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை சந்திப்பதே இதன் நோக்கமாகும். ஆனால் ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள உக்ரேனிய விமானப் பாதை வழியாக ஜெலென்ஸ்கி எப்படி அமெரிக்காவிற்கு வந்தார்? பல மாதங்களாக, ஜெலென்ஸ்கியின் இந்தப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அது கைகூடாமல் இருந்தது. எனினும் டிசம்பர் 11-ம் தேதி அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்தவுடன், பயணத்திற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. ஜெலென்ஸ்கி உக்ரைனில் இருந்து…

மேலும்...

கேவலப்பட்ட குஜராத் மாடல் – விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவு!

அகமதாபாத் (03 ஜூலை 2022): குஐராத்தில் தேர்தல் முறைகேடு மூலம் அமெரிக்கா சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் நின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், முறைகேடாக மதிப்பெண் பெற்றிருந்தது…

மேலும்...

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க் (24 ஜூன் 2022): இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆறு அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு அமைதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்கள், மற்றும் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல், சட்டவிரோத கைதுகள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம் வீடுகள் சட்டவிரோதமாக இடிப்பு ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆறு அமைப்புகளின் கூட்டமைப்பு அமைதியான போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக்க. இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) தெரிவித்துள்ளது. இதுகுறித்த IAMC…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

சியாட்டில் (21 பிப் 2022): கர்நாடகாவில் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹிஜாப் தடை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சியாட்டில், டெக்சாஸ், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க் மாநிலம், நியூ ஜெர்சி, புளோரிடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவில் உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் ஹிஜாப்…

மேலும்...

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!

நியூயார்க் (30 ஜன 2022): அமெரிக்காவில் பெய்துவரும் பனிப்புயலையொட்டி அங்குள்ள சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1,17,000 வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனியை அகற்றும்…

மேலும்...

வடகொரியா ஏவுகணை சோதனை – அமெரிக்கா கடும் கண்டனம்!

நியூயார்க் (27 ஜன 2022): வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து வடகொரியா புதிதாக இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வடகொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறும் வகையில் வடகொரியா செயல்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு வடகொரியா விளக்கம் அளிக்க வேண்டும்…

மேலும்...

மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. “இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள்,…

மேலும்...

தாலிபான்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டனர்: அமெரிக்கா

நியூயார்க் (10 செப் 2021): அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறிய பின்னர் முதல்முறையாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற 113 பேர் கத்தர் வந்தடைந்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் குழு செயலாளர், அமெரிக்க குடியுரிமை மற்றும் நீண்ட கால அமெரிக்க விசா வைத்திருப்போர் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வர அமெரிக்க அரசு கத்தர் நாட்டுடன் இணைந்து முயற்சி செய்தது. தாலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பயணிகள்…

மேலும்...

ஆப்கான் ஐ எஸ் ஐ எஸ் தளங்கள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

காபூல் (28 ஆக 2021): காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா . நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐஎஸ்கே தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை இரவு காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,…

மேலும்...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

அலாஸ்கா (29 ஜூலை 2021): அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் முதற்கட்ட தகவல்களின்படி, அலாஸ்காவின் சில பகுதிகள் கடற்கரையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில் , உள்ளூர் நேரம் இரவு 10:15 மணியளவில் இந்த நிலநடுக்கம்…

மேலும்...