எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக இன்னொருவர் கைது!

பெங்களூரு (18 ஜன 2020): எஸ் ஐ வில்சன் படுகொலை வழக்கில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் ஐ வில்சன் படுகொலை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை…

மேலும்...

எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது உபா வழக்கு!

காளியக்காவிளை (17 ஜன 2020): எஸ் ஐ வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள தவுபிக், சமீம் ஆகியோர் மீது உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவியாளா் வில்சனை கடந்த 8-ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் இரு நபா்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்,…

மேலும்...

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

காளியகாவிளை (16 ஜன 2020): காளியக்காவிளை எஸ்.ஐ வில்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் இன்று (வியாழன்) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக…

மேலும்...

தமிழக அரசு மீது மீது எச்.ராஜா தாக்கு!

சென்னை (13 ஜன 2020): தமிழகத்தில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டதாகவும் அரசு அதனை சரிவர கண்டு கொள்ளவில்லை என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளி முஸ்லீமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் வாயில் பிளாஸ்டிக் போட்டு ஒட்டிப்பாங்க என்றும்…

மேலும்...

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி குடும்பத்துக்கு ரூ 1 கோடி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (10 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்களால் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது….

மேலும்...