திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திறு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொது மக்களிடன் எடுத்துச்சொல்ல அனைத்து மாவட்டங்களிலும் 16ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை திமுக ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளதாகவும் தேர்தலை எதிர்கொள்ள எந்நேரமும் திமுக தயாராக உள்ளதாக கூறினார்.
மேலும் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்கள் கொடுக்கலாம் என்ற அவர் , உள்ளாட்சி தேர்தலிலும் நிச்சயமாக திமுக கூட்டணி தொடரும் எனவும் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறினார்.
விருப்பமனு கட்டண விபரங்கள்:
மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் - ரூ.50,000
மாமன்ற உறுப்பினர் - ரூ.10,000
நகர்மன்றத் தலைவர் - ரூ.25,000
நகர்மன்ற உறுப்பினர் -ரூ.5000
பேரூராட்சித் தலைவர் - ரூ.10,000
பேரூராட்சி மன்ற உறுப்பினர் - ரூ.2500
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.10,000
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் - ரூ.5000
இதில் ஆதிதிராவிடர் , பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும்.
விருப்பமான படிவத்தை 10 ரூபாய் செலுத்தி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.