சென்னை (06 ஜூலை 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளன. சென்னையில் ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாகவும், சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 538 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 352 பேருக்கும், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 251 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 215 பேருக்கும் கொரோனா தொற்று அதிகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.