கொரோனா பாதிப்பால் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

Share this News:

சென்னை (05 ஏப் 2020): கொரோனாவுக்கு தமிழகத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் 3000 த்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்தவர் ஆவார். துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது.

முன்னதாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 54 வயது ஆண் ஒருவர் கடந்த மாதம் 26-ந் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் கொரோனா பலி ஆகும். இதையடுத்து, 51-வயது ஆசிரியர், நேற்று காலை 7.45 மணியளவில் உயிரிழந்தார். இதேபோல் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.

இவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முடிவு தாமதமாக அளித்ததாக ஸ்டான்லி மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply