ஆபாச வீடியோவை காட்டி சிறுமியிடம் சில்மிஷம் – கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்!

சென்னை (07 ஜன 2020): ஆபாச வீடியோவைக் காட்டி 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 68 வயது அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி… 68 வயதாகிறது.. இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று.. செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

உடனே ஹெல்ப்லைன் எண்ணில் இருந்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு அந்த புகார் அனுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.

அதிமுக பிரமுகர் என்பதால் வெளியே வந்துவிடுவார் என்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கல்லறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ரவி இதுபோன்று தொடர்ந்து அச்சிறுமியிடம் பல மாதங்களாக தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....