கலெக்டரிடம் கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்!

Share this News:

மதுரை (13 ஜூன் 2020): கொரோனா நிதியாக மதுரை கலெக்டரிடம் ரூ 30 ஆயிரம் வழங்கியுள்ளார் பிச்சைக்காரர் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் ஊரு ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது பூர்வீகம் தூத்துக்குடி, மும்பையில் இருந்த இவர் மனைவி இறந்ததும் தமிழகம் வந்து பிச்சை எடுத்து வருகிறார்.

இவர் கடந்த 3 மாதங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் வெளியூர் செல்ல முடியவில்லை. மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பிச்சையெடுத்து, அதில் சேர்த்த ரூ10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, கடந்த மாதம் 18ம் தேதி மதுரை கலெக்டரிடம் வழங்கினார். தொடர்ந்து அவர் ரூ 30 ஆயிரம் கலெக்டரிம் வழங்கியுள்ளார்.

‘‘பிச்சையெடுப்பதில், எனக்கு சாப்பாட்டிற்கு போக மீதியுள்ள பணத்தை சேர்த்து, முன்பு அரசு பள்ளிகளுக்கு நிதியாக வழங்கினேன். இதுபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல பள்ளிகளுக்கு வழங்கியுள்ளேன். தற்போது சேர்ந்த பணத்தை கொரோனாவிற்கான நிதியாக வழங்கியுள்ளேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share this News: