ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து அப்பல்லோ குழப்பமான தகவல்!

Share this News:

ஐதராபாத் (27 டிச 2020): ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆவார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ள நிலையில் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மதியம்தான் எடுக்கப்படும் என அப்பல்லோ நிர்வாகம் கூறியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ளார். ஆனால் ரஜினியின் உடல் நிலையை பொறுத்து டிஸ்சார்ஜ் குறித்து இன்று மதியம்தான் எடுக்கப்படும் என அப்பல்லோ நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Share this News:

Leave a Reply