சிஏஏ போராட்டம் – சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

Share this News:

சென்னை (18 பிப் 2020): நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறி பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மார்ச் 11 வரை போராட்டத்திற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply