ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது – நீதிமன்றம் நோட்டீஸ்!

Share this News:

சென்னை (28 அக் 2021): மமக எம்.எல்.ஏக்களான ஜவாஹிருல்லா, அப்துல் சமது மமகவில் தொடரக்கூடாது என்ற மனு மீது விசாரனையில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி, தென்னுாரைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், சென்னை சிட்டி சிவில் 15வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 61, பொதுச்செயலாளர் அப்துல்சமது 52 ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் முறையே பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் தி.மு.க.,சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

மனித நேய மக்கள் கட்சியின் விதிமுறை 6வது பிரிவின்படி வேறு கட்சி உறுப்பினர்கள், ம.ம.க.,வில் உறுப்பினராக முடியாது. 23வது பிரிவின்படி, ம.ம.க., தனி சின்னத்தில் போட்டியிடலாமே தவிர மற்ற கட்சி சின்னங்களில் போட்டியிட கூடாது என உள்ளது.

கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல்சமது ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் தங்களை தி.மு.க., உறுப்பினர்கள் என தெரிவித்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். எனவே, அவர்கள் மனித நேய மக்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தொடர கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு இன்று (அக்.28ம் தேதி) விசாரணைக்கு வந்த போது, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை டிச.,1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.


Share this News:

Leave a Reply