பிரேமலதா முன்னாடி ஓட்ட கட்சி நிர்வாகிகள் பின்னால் ஓட – பரபரத்த போராட்டம்!

Share this News:

சென்னை (05 ஜூலை 2021): பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் நடத்தப பட்ட போராட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிள் ஒட்டியபடி கலந்துகொண்டார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். விலை உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் தமிழத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ம் தேதி அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று (ஜூலை 5) பல்வேறு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்நிலையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்துகொள்வதற்காக சைக்கிள் ஓட்டி போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவர் சைக்களில் சென்றபோது கட்சி நிர்வாகிகள் அவரது சைக்கிள் பின்னாடியே ஓடினர்.


Share this News:

Leave a Reply