ஆ.ராசா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?

Share this News:

சென்னை (31 மார்ச் 2021): திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி குறித்து பேசிய நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply