ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் சிலிண்டர் விலை!

Share this News:

சென்னை (01 ஜூலை 2020): சென்ற மாதத்தில் உயர்த்தப்பட்டது போன்று இந்த மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வு விலை வருமாறு:

சென்னை – நான்கு ரூபாய் உயர்வு
டெல்லி – ஒரு ரூபாய் உயர்வு
கொல்கத்தா – நான்கு ரூபாய் ஐம்பது பைசா உயர்வு
மும்பை – மூன்று ரூபாய் ஐம்பது பைசா உயர்வு

இந்த விலை உயர்வு 01.07.2020 முதல் நடைமுறைக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு துன்பத்திற்குள்ளாகி இருக்கும் பொது மக்களுக்கு இந்த விலை உயர்வு எரிகிற நெருப்பில் சிலிண்டரை போட்டதை போல் இருக்கும்.


Share this News: