மதக் கலவரத்தை தூண்ட மீண்டும் ஒரு நாடகம் – வசமாக சிக்கிய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்!

Share this News:

திருப்பூர் (18 மார்ச் 2020): மதக் கலவரத்தை தூண்ட தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு நடகமாடிய இந்துமக்கள் கட்சியை சேர்ந்த நந்த கோபால் என்பவர் போலீசின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நந்து, எஸ்.ஆர். எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது தம்மை பிற மதத்தினர், மற்றும் காவி வேட்டி கட்டியவர்கள் கத்தியால் குத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் திருப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நந்த கோபாலின் கார் ஓட்டுநர் ராமமூர்த்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மதக் கலவரத்தை தூண்ட ஓட்டுநர் ராமமூர்த்தியையே கத்தியால் குத்த நந்த கோபால் ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது.

இதனை அறிக்கையாக வெளியிட்டுள்ள போலீசார், சுய விளம்பரத்துக்காக மற்றும் லாபத்துக்காக பொதுமக்கள் மற்றும் மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply