சென்னை குறித்து அதிர்ச்சித் தகவல் – பிரபல பத்திரிகையாளரின் பதற வைக்கும் பேட்டி!

Share this News:

சென்னை (08 ஜூன் 2020): சென்னையில் பரவும் கொரோனா குறித்தும், வெளியில் சுற்றாதீர்கள், மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லை என்று கண்ணீர் உடன் பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன.

இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

“ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை எனக்கும், என் தம்பிக்கும் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு வார்ன் பண்ண வேண்டும் என்பதற்காகத் தான். கொரோனாவை பற்றித் தான். எங்கள் குடும்பத்திற்கு ரொம்ப நெருங்கிய நண்பர், உங்களுக்கும் நல்லாத் தெரியும், நான் பெயர் எல்லாம் சொல்ல விரும்பவில்லை. அவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சலாக இருந்தது.

இன்று காலை மூச்சுவிட கஷ்டமாகி ஒன்னுமே முடியாமல் போய்விட்டது. இது கொரோனா அட்டாக் போன்று இருந்தது. ஆனால் எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை. சென்னையில் உள்ள அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் பெட் இல்லை. அவரை அட்மிட் பண்ண அரசு மருத்துவமனைகளிலும் கூட ஒரு பெட் கிடைக்கவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள் என்கிறார்கள். மருத்துவமனைக்கு அழைத்து வந்து என்ன செய்வது என்று கேட்கிறார்கள்.

எங்களால் சிகிச்சை அளிக்க முடியாது என்கிறார்கள். கவர்ன்மென்ட் செக்ரடரி அளவில் எல்லாம் முயற்சி செய்தோம், மருத்துவமனை உரிமையாளர், எம்.டி., சேர்மன் என எல்லோரிடமும் கேட்டோம். ஆனால் யாராலும் எங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. பெட் இல்லை என்பது உண்மை தான் என்று வெளிப்படையாக கூறுகிறார்கள்.

அவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அவர் ரொம்ப நல்லவர். நமக்கு எல்லாம் கொரோனா வராது என்கிற பிரமாண்ட நம்பிக்கையில் அதிகமாக வெளியே சுத்தாதீர்கள். தேவையில்லாமல் வெளியே போகாதீர்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே செல்லுங்கள்.

அப்பவும் மாஸ்க் அணிந்து, விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்துப் போங்க. விதிமுறைகளை பின்பற்றினால் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று நினைக்காதீர்கள். ரொம்ப அவசியத்திற்காக மட்டும் போங்க. ஏனென்றால் இன்று அந்த குடும்பம் சந்தித்த பிரச்சனை இருக்கே. அதை பார்த்து எனக்கு எல்லாம் அழுகையே வந்துவிட்டது.

நான் அதிர்ந்து போயிருக்கிறேன். இந்த மாதிரி நிலைமை யாருக்காவது வந்தது என்றால் எங்கு போய் அட்மிட் பண்ணுவது என்றே தெரியவில்லை. அதனால் வீட்டிலேயே இருங்க, பத்திரமாக இருங்க. குடும்பத்தாரிடமும் சொல்லுங்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Share this News: