மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

Share this News:

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக – ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸால் முன்மொழியப்பட்ட ‘மேன்-டவ்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply