உள்ளே இருந்தவர்தான் கமல்ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Share this News:

சென்னை (16 செப் 2020): பிக்பாஸை தொகுத்து வழங்கும் கமல் கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தவர்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “, 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வராமல் துரோகம் இழைத்துவிட்டது.

150 நாட்களுக்கு மேலாக நாங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைச் சந்தித்து களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவர் என்றைக்காவது வெளியில் வந்தாரா? ‘பிக் பாஸ்’ போல வீட்டுக்குள் இருந்தபடி கமல்ஹாசன் அரசை விமர்சனம் செய்கிறார்” என்றார்.


Share this News:

Leave a Reply