இங்கெல்லாம் இது இல்லையாம்!

Share this News:

கரூர் (18 மார்ச் 2022): கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் குணமடைந்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது.

அதேபோல திருப்பூர் மாவட்டமும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இங்கு கரந்த இரண்டு தினங்களாக யாருக்கும் கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்படவில்லை.


Share this News:

Leave a Reply