அருகில் உள்ள மாநிலத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – பிரபல நடிகை சாடல்!

Share this News:

சென்னை (17 ஏப் 2020): கொரோனாவை வைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் செய்வதாக பிரபல நடிகை கஸ்தூரி சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி, 0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினராயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு!” என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை இந்தியாவில் 13,495 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 448 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் தற்போது வரை கரோனாவால் 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் மரணமடைந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply