மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Share this News:

சென்னை (30 ஜூன் 2021): கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் தனிமை படுத்தலில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்தி உள்ளேன். ஆகவே அடுத்த பதினைந்து தினங்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடந்த 10 தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி வரும் பொய் வதந்திகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும் அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன், செயல்பட்டும் வருகிறேன். சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகின்றேன். என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply