கார்கிவ் (02 மார்ச் 2022): உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட போலீஸ் தலைமையகத்தை ரஷ்யப் படையினர் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தனர்.
இதனால் மொத்தக் கட்டிடமும் பெரும் சேதமடைந்து, பல மாடிகள் நொறுங்கி, தீப்பிடித்து எரிந்து வருகிறது.
கீவ் நகருக்கு அடுத்த பெரிய நகரம் கார்கிவ். இங்குதான் தற்போது ரஷ்யப் படைகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இந்நகரை விட்டு பல ஆயிரம் பேர் ஏற்கனவே வெளியேறி விட்டனர். தற்போது ரஷ்யா ஏவுகணைகள் மூலம் இந்த நகரை தகர்த்து வருகிறது. பல முக்கியக் கட்டிடங்கள் ஏற்கனவே தரைமட்டமாகி விட்டன.
இந்த நிலையில் இன்று அங்குள்ள போலீஸ் தலைமையகக் கட்டிடம் தாக்குதலுக்குள்ளானது. அந்த பல மாடிக் கட்டிடம் மீது ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது