எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

Share this News:

காளியகாவிளை (16 ஜன 2020): காளியக்காவிளை எஸ்.ஐ வில்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் இன்று (வியாழன்) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவர் மீது சந்தேகித்தனர்.

இதையடுத்து, தமிழக, கேரள போலீஸாா் சிறப்பு தனிப்படைகளை அமைத்து தேடப்பட்டு வந்த இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா். இருவரையும் கா்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக தெரிவித்தனர். பின்னர், இருவரும் குமரி மாவட்ட போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்துள்ளனர்..

இந்த நிலையில், இருவரையும் தக்கலை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து குழித்துறை நீதிபதி முன்பு அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் ஆஜர்படுத்துகின்றனர்.


Share this News:

Leave a Reply