நீட் தேர்வு ரத்து – குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு!

Share this News:

சென்னை (05 ஜூன் 2021):: தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் நீட் பாதிப்பை ஆய்வு செய்ய குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை குழு ஆய்வு செய்யும். உயர்நிலைக்குழுவில் கல்வியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply