மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி!

Share this News:

சென்னை (25 அக் 2021): மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பழைய அடையாள அட்டையைக் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அது இல்லையென்றால் பள்ளிச்சீருடை , பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply