முஸ்லிம் மத குருமார்கள் யார்? – ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை சரமாரி பதில்!

Share this News:

சென்னை (06 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினி முஸ்லிம் மதகுருமார்களையும் சாடியிருந்த வேளையில் ரஜினிக்கு முஸ்லிம் மதகுருமார்கள் சரமாரி பதில் அளித்துள்ளனர்.

புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார்.

இந்நிலயில் தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம் மதகுருமார்களின் பங்களிப்பை ரஜினி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்க்கும் குடியுரிமை சட்டத்தை ரஜினி ஆதரிப்பதன் நோக்கம் பாஜகவின் குரலே ரஜினி என்றும் ஜமாத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

மேலும் ரஜினி இந்திய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், “உங்களை சந்தித்து முஸ்லிம் மதகுருமார்கள் என்றால் யார் என்பதை விளக்க தயாராக இருப்பதாகவும்” அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply