தமிழ் நாட்டில் தொடர் மின்வெட்டு – அமைச்சர் செந்தில் பாலாஜி செய்வது இதுதான்!

Share this News:

சென்னை (22 ஜூன் 2021): திமுக அரியணையில் அமர்ந்த ஒரு வாரத்திலேயே மின்வெட்டு புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

எல்லாவற்றையும் ஓரளவுக்கு மேனேஜ் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மின்வெட்டு பிரச்னை பெரிய தலைவலியாக உள்ளது.

இச்சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர். மேலும் குறைகளையும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்தத் தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “9 மாதங்களாக அதிமுக அரசு எவ்விதம் மின் பராமரிப்பும் செய்யாததே மின்வெட்டுக்கு காரணம். தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.


Share this News:

Leave a Reply